ஆத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமானதையடுத்து, அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர் முடுக்குத் தெரு லட்சுமணன் மகன் விக்னேஷ் (15), புதுநகர் பெருமாள் மகன் விசாகன் (14), ராஜு மகன் ஸ்ரீகாந்த் (14) ஆகிய 3 பேரும் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்த அவர்கள், மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் மாயமாகி விட்டனராம். மாணவர் விக்னேஷ் தனது வீட்டிலிருந்து ரூ. 3 ஆயிரம் கொண்டு வந்ததாகவும், அதை வைத்து அவர்கள் வெளியிடங்களுக்கு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பஜாரில் உள்ள சிசிடிவி கேமராவில் 3 பேரும் ஒரே சைக்கிளில் சென்றது பதிவாகி உள்ளது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.