கோவில்பட்டி அருகே வீட்டு முன் நின்று கொண்டிருந்த இளம்பெண் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத் தெருவைச் சேர்ந்த லிங்கசாமி மகள் கார்த்திகா(24). இவர் செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள சண்முகா நகர் பல்லக்குச் சாலையை சேர்ந்த சு.வேலம்மாள்(35) வீட்டு முன் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் கார்த்திகா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.