கோவில்பட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த மணிமாலா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாராம். மருத்துவ அதிகாரிகளின் நடவடிக்கையே அவரது தற்கொலைக்கு காரணம் என்றும், செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு செவிலியர் கண்காணிப்பாளர் ஜெஸி கிறிஸ்டினன் தலைமை வகித்தார். இதில், செவிலியர் சங்கப் பொருளாளர் மணிமேகலை உள்பட திரளான செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com