புதிய ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடியில் பத்திர எழுத்தர்கள் மற்றும் நிலத்தரகர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பத்திரப் பதிவாளர் சங்க மாநில இணைச் செயலர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பாலமுருகன், பத்திர எழுத்தர் செந்தில்நாதன், நிலத்தரகர்கள் சங்கச் செயலர் அமிர்தநாயகம், மாநிலப் பொருளாளர் சிவசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.