சாத்தான்குளத்தில் நெற்றிக்கண்ணுடன் காணப்பட்ட அபூர்வ தேங்காயை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணற்றைச் சேர்ந்த விவசாயி ஜெகன் (30), தனது தோப்பில் விளைந்த தேங்காய்களை விற்பனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தார். அதில் ஒரு தேங்காயில் 3 கண்கள், அதன் நடுவில் ஒரு கண் என 4 கண்கள் காணப்பட்டது.
தற்போது தேங்காயில் 4 கண் தேங்காய் சாதாரணமாக காணப்படும் நிலையில், நடுவில் நெற்றிக்கண் தோற்றத்துடன் காணப்பட்ட அபூர்வ தேங்காயை மக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.