உடன்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 10ஆவது ஆண்டு தொடக்க விழா, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
கட்சியின் 10ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரிமுதல் சென்னை வரை விழிப்புணர்வு பேரணி மற்றும் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதையொட்டி உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் நடைபெற்ற விழாவில், கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கொடியேற்றி வைத்து பேசினார். இதில், கட்சியின் மாநிலச் செயலர் ஜோசப் நொலாஸ்கோ, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆசாத், மாநிலப் பொதுச் செயலர் மொய்தீன் சேட்கான், மாநில மருத்துவ சேவை அணிச் செயலர் கிதிர், மமக மாவட்டத் தலைவர் யூசுப், மாவட்டச் செயலர் பீரப்பா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலர் நூர், மாவட்ட மாணவரணிச் செயலர் பரக்கத்துல்லா, உடன்குடி நகரத் தலைவர் ஜகுபர் சாதிக், பொருளாளர் சேக் முகம்மது, செயலர் சிந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.