இந்திய-நேபாள கிராமிய விளையாட்டுப் போட்டி: நாசரேத்  கல்லூரி மாணவருக்கு தங்கம்

இந்திய-நேபாள கிராமிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர், குண்டு எறிதலில் போட்டியில்  தங்கப்பதக்கம் வென்றார்.

இந்திய-நேபாள கிராமிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவர், குண்டு எறிதலில் போட்டியில்  தங்கப்பதக்கம் வென்றார்.
2017-18ஆண்டு பெடரேஷன் கோப்பைக்கான 4ஆவது  இந்திய-நேபாள கிராமிய விளையாட்டுப் போட்டிகள் காத்மாண்டுவில் 2 நாள்கள் நடைபெற்றன. 
இதில், குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் ஆர். ராஜேஷ்மூர்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவரை கல்லூரிச் செயலர் எஸ்.டி.கே. ராஜன், முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை,  துணை முதல்வர் பாஸ்கர் ராஜபால்,  உடற்கல்வி இயக்குநர் ராஜாசிங் ராக்லெண்ட் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com