குலசேகரன்பட்டினம் கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி முகாம்

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு கோயில் செயல் அலுவலர் இரா.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அறநிலையத் துறை ஆய்வாளர் பகவதி, தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் நிர்வாக அதிகாரி  இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் எம்.சந்திரசேகரன், உதவி மின் பொறியாளர்கள் ஐ.ராம்மோகன் (உடன்குடி), எஸ்.சிலுவைப்பிச்சை(திருச்செந்தூர்) ஆகியோர் தீத்தடுப்பு, பேரிடர் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பேசினர். சிறு தீயணைப்பான் கருவிகளைப் பயன்படுத்தி கோயில் பணியாளர்கள், காவலர்கள் தீயை அணைப்பதற்கும் பயிற்சியளிக்கப்பட்டது.
இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com