மணப்பாடு புனித வளன் பள்ளி பசுமைப் படை மாணவர்கள் சார்பில் நெகிழி(பிளாஸ்டிக்) ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பள்ளி வளாகம், பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் இருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை மாணவர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், நெகிழிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.இதில், பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சத்தியன், பசுமைப் படை அலுவலர் வலன்றீன் இளங்கோ மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் மனோகர் சாமுவேல்ராஜ், தாளாளர் இருதயராஜ் ஆகியோர் பாராட்டினர்.