சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ பஞ்சபிரம்ம அம்பிகை மடம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஸ்ரீஹரி ஓம் இந்து சேவா சங்கம் சார்பில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில், அமைப்பின் தலைவர் சொ.பழனிவேல், துணைத் தலைவர் ப. அழகு சுப்பிரமணியன், செயலர்கள் லெ.கார்த்திகேயன், ரெ.சுடலைமுத்து, பொருளாளர் ரா. ஆறுமுக நயினார், இளைஞரணித் தலைவர் ச.பழனிவேல், இளைஞரணி துணைத் தலைவர் த.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.