கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி நிறுவனர் தலைவர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சுசிலாதேவி முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ரதிமுனிஸ்ரீ பொங்கல் விழாவை தொடங்கிவைத்தார். மாணவர், மாணவிகளின் ஒயிலாட்டம், கும்மி, சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, உறியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை தலைமையாசிரியை சாந்தினி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கண்ணப்பன் தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்தார். கல்லூரி வளாகத்தில் துறை வாரியாக மாணவர், மாணவிகள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் செய்திருந்தனர்.