சாத்தான்குளம் அருள்மிகு திரிபுரசுந்தரி முத்தாரம்மன் கோயிலில் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் பகவத் கீதை உபன்யாசம் நடைபெற்றது.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கில் டேண்டி என்ற முகுந்த தத்த தாசன் பங்கேற்று உபன்யாசம் செய்தார். பின்னர் அவர் பக்தர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
இதில், சாத்தான்குளம், பேய்க்குளம், திருச்செந்தூர் வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.