தூத்துக்குடி அருகேயுள்ள கீழ அலங்காரத்தட்டு கிராமத்தில் உள்ள புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் குருத்துவ அருட்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கீழ அலங்காரத்தட்டின் முதல் குருவாக திருத்தொண்டர் மரிய மிக்கேல் சுபாஷை, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திருநிலைப்படுத்தினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன், வட்டார முதன்மை குரு ரொலிங்டன், ஆலய பங்குத்தந்தை ஜான் எஸ். செல்வம், முன்னாள் பங்குத்தந்தைகள், டங்கின் கார்மல் சபை அருள்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.