ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 24 கிராம உதவியாளர் பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள 24 கிராம உதவியாளர் பணியிட நேர்முகத் தேர்விற்கு 1450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள 24 கிராம உதவியாளர் பணியிட நேர்முகத் தேர்விற்கு 1450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  கிராமம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அதன்படி,  ஆறாம்பண்ணை, வல்லநாடுகஸ்பா, கொட்டாரக்குறிச்சி, வடவல்லநாடு, திருப்புளியங்குடி, விட்டிலாபுரம், தெற்குகாரசேரி, தெய்வசெயல்புரம், தன்னூத்து, பத்மநாபமங்கலம், சிவகளை, மணக்கரை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்த நபர்கள் காலை 8 மணி முதல் நடைபெறும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 
செக்காரக்குடி-2, ஸ்ரீவைகுண்டம், நட்டாத்தி, வல்லகுளம், கீழ்பிடாகைகஸ்பா, ஆறுமுகமங்கலம், கலியாயூர், கொங்கராயகுறிச்சி, கீழ்பிடாகை அப்பன் கோயில், ஆதிச்சநல்லூர், இருவப்பபுரம்-1, இருவப்பபுரம்-2 ஆகிய கிராமங்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு மேல் நேர்முகத் தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும்பட்சத்தில் விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு கிராம உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள்  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com