தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி வசந்தா (45). இவர், அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, தூத்துக்குடி முத்து தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்கள் திடீரென வசந்தா கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.