ஆழ்வார் திருநகரி ஒன்றிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஆத்தூர் அருகிலுள்ள கொழுவை நல்லூர் முத்தாரம்மன் திருக்கோயில் திடலில் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் பி.தங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஜே.மோகன்ராஜ், மாவட்ட வழக்குறைஞர் அணித் தலைவர் சி.கங்கை அமரன், மாவட்ட அமைப்புச் செயலர் பி.சக்திவேல், திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் எஸ்.இசக்கிமுத்து, உடன்குடி ஒன்றிய அனுமன் சேனா தலைவர் பி.குணசேகரன், உடன்குடி ஒன்றிய துணைத் தலைவர் சி.சண்முகவேல் மற்றும் இளைஞரணித் தலைவர் கே.அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலர் ஐ.ரவிகிருஷ்ணன் பேசினார். இந்து மாணவர்களுக்கு மாநில அரசு கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி ஆத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஆத்தூர் சுற்று வட்டார சாலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி சீரமைக்க வலியுறுத்துவது, தேனி மாவட்டம் பொன்னுநாயக்கன் பட்டியால் பாதிக்கப்பட்ட இந்து தலித் மக்களுக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் மற்றும் பயங்கரவாதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிரணி அமைப்பாளர்கள் டி.கெளசிகா, ஆர்.ஜெயந்தி, எஸ்.தங்கபுஷ்பம், வி.பால்கனி, டி.பொன்செல்வி, உறுப்பினர்கள் டி.ராஜ்குமார், ஆர்.வீரமணி, எஸ்.திருமணி, எஸ்.முத்துக்குமார், வி.டி.நாகலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர் தலைவர் சக்திவேல் வரவேற்றார்.