நாசரேத்தில் நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

நாசரேத் பேரூராட்சி , நாசரேத் காவல் துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து டெங்கு

நாசரேத் பேரூராட்சி , நாசரேத் காவல் துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து டெங்கு தினத்தையொட்டிநிலவேம்புக்குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
நாசரேத் பேரூராட்சிக் கூட்ட அரங்கில் செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரங்கசாமி தலைமையில் டெங்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தணிக்கையாளர் ரமேஷ் பேசினார். பின்னர் நாசரேத் காவல் நிலையம், ரயில் நிலையம் , பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிலவேம்புக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி செயல் அலுவலர், காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர்கள் துரை, பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் பால் ஆபிரகாம், தியாகராஜன் டெங்கு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com