தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1025வரை உயர்ந்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை தூத்துக்குடியில் ரூ.1008.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.1007.00 ஆகவும், கழுகுமலையில் ரூ.1015 ஆகவும், கயத்தாறில் ரூ.1010 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.1007 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.1025 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்துக்கான வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.1008.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.1008.50 எனவும் நிர்ணயம் செய்துள்ளன.
எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ) மேற்கூறிய தொகைக்கு அதிகமாக, நுகர்வோர் பணம் செலுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.