மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் கொம்மடிக்கோட்டை சந்தோஷ் நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ( அக். 15) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கம், சாத்தான்குளம் வட்டார வளமையம் சார்பில் நடைபெறும் இம்முகாமில் 18 வயதுக்குள்பட்ட பார்வை, செவித்திறன், கை, கால் இயக்கம், மனவளர்ச்சி ஆகியவற்றில் குறைபாடு இருந்தால் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
மாற்றுத்திறன் குழந்தைகளின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 6, குடும்ப அட்டை நகல்-1, ஆதார் அட்டை நகல்-1 கொண்டு வர வேண்டும். முகாம் பங்கேற்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை உள்பட பல்வேறு உதவிகள் செய்துதரப்படும் என வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீ. மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இம்முகாம் குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடி, செக்கடிவிளை, சிதம்பராபுரம், புதுக்குளம் கிராமப்பகுதிகளில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.