மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான ஆண்கள் ஹாக்கிப் போட்டி கோவில்பட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கண்ணப்பன் விடுத்துள்ள அறிக்கை:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் பங்கேற்கும் ஆண்கள் ஹாக்கிப் போட்டி கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அக். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இப்போட்டியை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தொடங்கி வைக்கிறார்.
இதில், பல்கலைக்கழகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றிபெறும் அணியினருக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை இயக்குநர் துரை ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கவுள்ளனர். ஏற்பாடுகளை எனது தலைமையில், உடற்கல்வி இயக்குநர் ராம்குமார் செய்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.