காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய செயலர் பங்கேற்பு

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில், கட்சியின் அகில இந்திய செயலர் சஞ்சய் தத் பங்கேற்றுப் பேசியது:
மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியினர் தயாராக வேண்டும். ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும், மக்களவைத் தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவோம். அதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் மத்திய பாஜக அரசு தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது. தமிழகத்துக்கு வரவேண்டி நிதியை மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு பாஜக அரசு திருப்பிவிடுகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தை தற்போதைய பாஜக அரசு புறக்கணித்து வருகிறது. அதிமுக அரசை திரைமறைவில் பாஜக இயக்குகிறது என்றார் அவர்.
கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஏபிசிவீ சண்முகம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வேல்துரை, டேனியல்ராஜ், ராணி வெங்கடேசன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்டத் தலைவர்கள் சி.எஸ். முரளிதரன், சீனிவாசன், ஸ்ரீராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com