திமுக தலைவர் மு.கருணாநிதி மரணமடைந்த செய்தியை அறிந்து, அதிர்ச்சியில் இறந்த சாத்தான்குளம் தொழிலாளியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரத்தைச் சேர்ந்தவர் திமுக தொண்டர் எட்வின்தனராஜ். கருணாநிதியின் இறந்த செய்தியை கேட்ட அவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார். அவருக்கு, திமுக தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதியை எட்வின்தனராஜ் மனைவி அமுதாஷீலாவிடம் தலைமைக் கழகம் சார்பில் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலர்கள் சாத்தான்குளம் ஆ.செ. ஜோசப் உடன்குடி பாலசிங் , சாத்தான்குளம் நகரச்செயலர் மகா. இளங்கோ, வழக்குரைஞர் கிருபா, மாவட்டஇளைஞரணி துணைஅமைப்பாளர் ராமஜெயம், நெசவாளர்அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு மாவட்டப்பிரதிநிதி லெ.சரவணன் , மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.