தூத்துக்குடியில் எழுத்தறிவு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், உலக எழுத்தறிவு தினத்தையொட்டி நடைபெற்ற இப் பேரணியை, கல்லூரி முதல்வர் து. நாகராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநர் டோனி மெல்வின் முன்னிலை வகித்தார்.
கல்லூரியில் இருந்து தொடங்கி இந்த பேரணி திருச்செந்தூர் சாலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் ஜோசப்பின் ஜெரினா, கோபாலகிருஷ்ணன், செல்வராஜபுஷ்பா, மணிகண்டன் மற்றும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.