விநாயகர் சதுர்த்தியையொட்டி உடன்குடியில் பாரதமாதா சேவா சங்கம் சார்பில் காய்கனி படைத்தல் திருவிழா நடைபெற்றது.
உடன்குடி வில்லிகுடியிருப்பு அருள்மிகு முத்துமாலையம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஊர்த் தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். சிவபாலன் முன்னிலை வகித்தார். விழாவில் காய்கனிகள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் காய்கனிகள் உண்பதால் உடல்நலனில் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இயற்கை உணவின் மகத்துவம் குறித்து இயற்கை நல்வாழ்வு சங்கச் செயலர் எஸ். செல்வராஜ் பேசினார். மாலையில் அனைவருக்கும் காய்கனிகள் வழங்கப்ப ட்டன.
ஏற்பாடுகளை பாரதமாதா சேவா சங்க நிர்வாகிகள் அஜய், முகேஷ், சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.