கயத்தாறு வட்டம், மேலப்பாறைப்பட்டியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடம்பூர் குறுவட்டத்திற்கு உள்பட்ட மேலப்பாறைப்பட்டி, கழுகாசலபுரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு வட்டாட்சியர் லிங்கராஜ் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் அழகம்மாள் பிரேமா (மேலப்பாறைப்பட்டி), லதா (குருமலை) ஆகியோர் முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து வாரிசு சான்றிதழ், பெயர் திருத்தம், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.