கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட அணி மற்றும் இயற்கை கழகத்தின் சார்பில் பசுமை நடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், இளையரசனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள தாவரவியல் தோட்டத்தை சுற்றிக் காண்பித்து, அந்தத் தோட்டத்தில் உள்ள மரங்கள், பூச்சியினங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்பட்டது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம், விலங்குகள் பாதுகாப்பு குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டு விளக்கிக் கூறப்பட்டது.
ஏற்பாடுகளை இயற்கை கழகப் பொறுப்பாளரும், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான மகேஷ்குமார் செய்திருந்தார்.