தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு வாங்கிய ரபேல் ரக விமான கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறியும்,

மத்திய அரசு வாங்கிய ரபேல் ரக விமான கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறியும், மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி சார்பில், தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  மத்திய முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் முரளிதரன், ஜெயக்குமார் (தெற்கு), சீனிவாசன் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் எஸ். டேனியல்ராஜ், வேல்துரை, சுடலையாண்டி, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயக்கொடி  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com