உடன்குடியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன் தலைமை வகித்து 175 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி தனித் துணை ஆட்சியர் மு.சங்கரநாராயணன் வரவேற்றார். பொதுமக்களின் பல்வேறு மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
முகாமில், மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அனிபிரிமின், வருவாய் ஆய்வாளர் தாஹிர்அஹமது, மண்டலத் துணை வட்டாட்சியர் கோமதிசங்கர், வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் சுல்தான், தேரியூர் ஊர் தலைவர் சிவநடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.