தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்துக்கு (துடிசியா) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்துக்கு (துடிசியா) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, சங்கத் தலைவராக கே. நேரு பிரகாஷ், பொதுச் செயலராக ராஜ் செல்வின், பொருளாளராக சந்திரமோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், துணைத் தலைவர்களாக நரேன் தர்மராஜ், ராஜேந்திரன், தர்மராஜ் ஆகியோரும், இணைச் செயலர்களாக தனராஜ், லினோ, இலியன்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை துடிசியா அமைப்பின் முன்னாள் தலைவர் ஜெயராமன், கணேசன், கிரகதுரை, தேர்தல் அதிகாரி நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com