மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமை மாநில பெண்கள் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தொடங்கிவைத்துப் பேசினார். மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசியச் செயலர் ஹென்றி திபேன் பேசினார்.
இதில், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், திருநெல்வேலி வழக்குரைஞர் பிரிட்டோ, மாவட்ட முதன்மை குரு கிருபாகரன், வழக்குரைஞர் அதிசயகுமார், பேராசிரியை பாத்திமா பாபு, செல்வராஜ், எம்பவர் அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்