தேசிய அளவிலான டேக்வான்டோ போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள தேசிய சீனியர் டேக்வான்டோ போட்டியில் கலந்துகொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்ட 20 பேரில் 6 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குழுவைச் சேர்ந்த 20 பேருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிறுவன இணை துணைத் தலைவர் சுமதி கலந்துகொண்டு, வீரர்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு டேக்வான்டோ சங்க பொதுச் செயலர் பாஸ்கர், வின்னர் கிளப் தலைவர் சண்முகராஜ், துணைத் தலைவர் மாணிக்கம், நிறுவன மேலாளர்கள் நாகராஜ், முகுந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.