ஜயங்கொண்டம் நகராட்சிக்கு ரூ. 2.1 கோடியில் புதிய கட்டடம்கட்டும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு ரூ. 2.1 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு ரூ. 2.1 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் பங்கேற்று இடைவெளி உள்நிரப்பும் திட்டத்தின் கீழ், ரூ. 2.1 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணியை தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளர் புகழேந்தி, நகர வடிவமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், பணி மேற்பார்வையாளர் பிரசாத், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், தங்க. பிச்சைமுத்து, அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com