அரியலூர் மாவட்டம், தேளூர், கீழப்பழுவூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 22) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் க. ராஜமாணிக்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேளூர் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருகோணம், செட்டிதிருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 5.30 வரை மினிவிநியோகம் இருக்காது.
கீழப்பழுவூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, மேத்தால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை பணிநிறைவடையும் வரை மினிவிநியோகம் இருக்காது.