தில்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, மக்கள் சேவை இயக்கத்தினர் இலையை ஆடையாக அணிந்துகொண்டு அரசு தலைமை கொறடா அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகள் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் சேவை இயக்கத்தினர் நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, அவர்கள் வெள்ளிக்கிழமை இலைகளை ஆடையாக உடுத்திக்கொண்டு, அண்ணாசிலையில் இருந்து பேரணியாகச் சென்று, அரசு தலைமை கொறடா அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றனர்.
அங்கு தலைமை கொறடா இல்லாததால், அவரது உதவியாளரிடம் மனு அளித்தனர்.