ஆசிரியர் தகுதி தேர்வு: ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநில தொடக்க கல்வி இணை இயக்குநர் க. சசிகலா தலைமை வகித்தார். கூட்டத்தில், வரும் 29 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், அரியலூர் மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களிலும், 30 ஆம் தேதி இரண்டாம் தாள், 23 தேர்வு மையங்களிலும் நடைபெறுகிறது. இந்த தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.மாரிமுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சு. அனந்தநாராயணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், தங்கமணி, நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, பெருமாள், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன், பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com