மே 2 முதல் கோடைகால பயிற்சி முகாம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மே.2 ஆம் தேதி மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் தொடங்குகிறது.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மே.2 ஆம் தேதி மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் தொடங்குகிறது.
இதுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் க.ரகுநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 2 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதேபோல், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மே 2 முதல் 16 ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 2 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேற்கண்ட விளையாட்டு மைதானத்திற்கு வருகை தர வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 7401703499 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com