அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மே.2 ஆம் தேதி மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் தொடங்குகிறது.
இதுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் க.ரகுநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 2 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதேபோல், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மே 2 முதல் 16 ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 2 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேற்கண்ட விளையாட்டு மைதானத்திற்கு வருகை தர வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 7401703499 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.