ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

அரியலூர் மாவட்ட ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம், சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத் தலைவர்

அரியலூர் மாவட்ட ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம், சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத் தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.செயலர் நல்லதம்பி அறிக்கையினை வாசித்தார். சங்க நிதி வரவு, செலவுகளை பொருளாளர் த.குடியரசன் வாசித்தார்.
கூட்டத்தில்,  ஓய்வூதியர்களின் ஆதரவற்ற வாரிசுகள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான மாத வருமான வரம்பு ரூ.6,000 ஆக உயர்த்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com