கீழப்பழூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) க. ராஜா கென்னடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி இரண்டாண்டு பட்டயப் படிப்புக்கான (பங்ஹஸ்ரீட்ங்ழ் பழ்ஹண்ய்ண்ய்ஞ்) நேரடி உடனடி மாணவர் சேர்க்கை கீழப்பழூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் ஆக. 31 வரை நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் தங்கள் உண்மை சான்றிதழ்களுடன் நேரில் வந்து உரிய கட்டணத்தை செலுத்தி சேர்க்கை ஆணை பெற்றுக்கொள்ளலாம்.