முந்திரி தோப்பில் தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் மகள் புஷ்பா (30). இவர் எம்எஸ்சி

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் மகள் புஷ்பா (30). இவர் எம்எஸ்சி பிஎட் படித்துவிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படித்து  வந்தார். இவர் வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை, இந்நிலையில் காலை 9 மணியளவில் அருகேயுள்ள இளையபெருமாள்நல்லூர் கிராமத்தின் முந்திரி காட்டில் உள்ள முந்திரி மரத்தில் புஷ்பாவின் சடலம் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது தாய் சுகுனாவதி, புஷ்பாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் முத்துகுமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com