ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் தலைமையில் மாவட்டத் துணைச் செயலர் தங்கபிச்சைமுத்து, இலக்கிய அணி மாவட்டச் செயலர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், நகரச் செயலர் பி.ஆர். செல்வராஜ், ஒன்றியச் செயலர் கல்யாணசுந்தரம், ஜெ.வி. தண்டபாணி, ப. தவசீலன், ஜகன்ராஜ், மனோகரன், அண்ணாதுரை, வழக்குரைஞர் கலைமணி உள்ளிட்ட அதிமுகவினர் ஜயங்கொண்டம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக சென்று ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே வைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே நகரச் செயலர் பெருமாள், மாவட்ட மருத்துவர் அணி செயலர் மருத்துவர் கே. ஜெயராமன் ஆகியோர் உள்ளிட்டோர் ஜெயலலிதா படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலர் மருதமுத்து, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் ரீடு செல்வம், எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலர் பாலு, ஆகியோர் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தனர்.