அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி,கைத்திறன்,துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மைச் செயலருமான மு. பணீந்திர ரெட்டி தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொது சுகாதாரம்,நோய் தடுப்புத் துறை, டெங்கு தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்
குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சுரேஷ், கோட்டாட்சியர்கள்
மோகனராஜன், டினாகுமாரி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.