டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலர் டி. தண்டபாணி, தமிழக அனைத்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.
அம்பேத்கர் வழியன், மாவட்டத் தலைவர் வி. ராஜீவ்காந்தி, தேமுதிக மாவட்டச் செயலர் இராம. ஜெயவேல், பாமக மாநில துணைச் செயலர் சின்னதுரை, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர்
செல்வநம்பி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல திருமானூர்,ஜயங்கொண்டம்,செந்துறை,பொன்பரப்பி,ஆண்டிமடம்,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.