மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரியின் சொட்டுநீர் பாசனத் திட்டத்திற்கு தோட்டக்கலை பயிர்களான காய்கறிப்பயிர்கள்

அரியலூர் மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரியின் சொட்டுநீர் பாசனத் திட்டத்திற்கு தோட்டக்கலை பயிர்களான காய்கறிப்பயிர்கள், பழப்பயிர்கள், மலர்கள் மற்றும் நறுமணப் பயிர்களில் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க பொருள் இலக்கீடாக 1080 ஹெக்டேருக்கு ரூ.8.08 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
 தற்போது நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து வரும் தருணத்தில் குறைந்தளவு நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதே சிறந்ததாகும்.
 இத்திட்டத்தின் மூலம் 30-40 சதவீதம் நீர் சேமிக்கப்படுவதோடு 20-25 சதவீதம் கூடுதல் மகசூல் பெற வாய்ப்புள்ளது. 20 சதவீதம் உரச்செலவை குறைக்கவும் முடியும். சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் நீர் பாய்ச்சும்போது சொட்டுவான்கள் மூலம் செடிகளின் வேர்ப்பகுதிகளில் மட்டும் நீர் சொட்டுவதால் நீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது. செடிகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின் படி, அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நுண்ணீர் (சொட்டுநீர்) பாசனத் திட்டம் செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல், வயல் வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிறு,குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் அளவு அறிக்கை போன்ற ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே ‌t‌n‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n / ‌h‌o‌r‌t‌i /‌m‌i‌m‌i‌s  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். நுண்ணீர்பாசன நிறுவனங்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளன.
சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்டத்திற்கு 2.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன வசதியுள்ள, தகுதியுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
 மேற்கண்ட தகவல் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com