அரியலூர் வட்டம், கீழப்பழூர், வடுகப்பாளையம், உடையார்பாளையம் வட்டம் வெத்தியார்வெட்டு, குருவாலப்பர் கோவில்,ஆண்டிமடம் வட்டம் ஸ்ரீராமன் , செந்துறை வட்டம் தளவாய் (தெ) ஆகிய 6 கிராமங்களில் டிச.15-ல் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில், வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடித் தீர்வு வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.