இந்திய கம்யூ. கட்சிக் கூட்டம்

அரியலூர் மாவட்டம், திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நிர்வாகி கடல்கன்னி தலைமை வகித்தார்.  கிளைச் செயலர் கல்யாண சுந்தரம், நிர்வாகி கலிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், வளர்ச்சி குறித்தும் ஒன்றியச் செயலர் ஆறுமுகம் பேசினார்.
கூட்டத்தில், திருமானூர் காந்திநகர்-அம்பேத்கர் நகர் வரை உள்ள சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி செப்பனிட வேண்டும். காந்திநகர் மாரியம்மன் கோயில் தெருவில் பெயர்ந்த சிமென்ட் சாலையை மண் சாலையாக மாற்றி வருவதை கண்டிப்பது. காந்திநகர் முதல் கொள்ளிடம் ஆறு செல்லும் வரை உள்ள சாலையை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.  கீழமடவளாகத்தில் சாக்கடை வடிகால் வசதி செய்து தர வேண்டும். திருமானூர், ஏலாக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் வெளிச்சந்தையில் 24 மணி நேரமும் மது விற்பனை தாராளமாக நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com