அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம், ஆண்டிமடம் அம்மா தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
செயலர் அன்பழகன், அம்மா தொண்டு நிறுவனர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியானது அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தொடங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நிறைவுப் பெற்றது. அங்கு மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழக்கை துணையை தேடிக்கொண்டனர். ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.