கீழகுடியிருப்பு டாஸ்மாக் கடை முற்றுகை

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கீழகுடியிருப்பு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கீழகுடியிருப்பு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஜயங்கொண்டம் அருகே கீழகுடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால்,அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறி கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ஜயங்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இது குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு, அறிவுறுத்தியதன் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com