அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபினவ்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏற்கெனவே இம்மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அனில்குமாரி கிரி சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அபினவ்குமார், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திங்கள்கிழமை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.