அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினர்.
மாவட்ட தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.