வடக்கேரி தூர்வாரும் பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சியிலுள்ள வடக்கேரி தூர்வாரும் பணியை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சியிலுள்ள வடக்கேரி தூர்வாரும் பணியை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழகத்திலுள்ள ஏரி மற்றும் குளங்களை தூர்வாரும் பணிகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, முள்ளுக்குறிச்சி வடக்கேரி தூர்வாரும் பணியை திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.எஸ். சிவசங்கரன் தொடக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராஜ், துணைச் செயலர் எழில்மாறன், அவைத்தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com